பாரதிபிரியன் கவிதைகள்
Wednesday 20 November 2013
Wednesday 5 June 2013
வெளிச்சம் விழுங்கிய
இரவு பொழுதில்
வெகுநேர தொலைபேசி
உரையாடல்
தொலைந்துபோன மனசு......
இறுதியில் எந்த முடிவும்
புலப்படாது சாமர்த்தியமாய்
முடிந்ததும்.
இன்னும் மனவெளிச்சமும்
மங்கிப்போய்.
இன்னும் பேசி
இருக்கலாமோ?
என்ன சொல்ல
முனைந்தாள்?
பிடித்ததை பிடிக்கவில்லை
என்கிறாளா?
வெளிபடுத்துதல்
சற்று சுவாரசியம்
குறைக்கும் என தள்ளி
போடுகிறாளா?
நிறைய கேள்விகளோடு
குழம்பிய மனது குட்டையாய்........
எந்த மீனை
பிடிக்கபோகிறாள் ?
Wednesday 29 May 2013
உன் நினைவுகளால்
கொட்டி இறைத்த
மல்லிகைகளை
கோர்கத்துவங்கி ...........
இன்று
கவிதை மாலையாய்..........
முழுதும் நீ படித்தாய்
என அறியும்போது
எழுதுகிற எவருக்கும்
கிடைக்காத அதிசயம்.
யாருக்கென
எழுதப்பட்டதோ .........
அவளுக்கே சூடிய மாலை
ஆகிற அற்புதம்............
சிலிர்கிற தருணங்கள்...
பொங்கிடும் உற்சாகம் ..
புரவியிலேறி
உன்னோடு பயணிக்கிற
அனுபவமாய் இனிக்கிறது..
Subscribe to:
Posts (Atom)